Saturday, January 25, 2020

பொலிக பொலிக பொலிக - Of Precognition or Clairvoyance in Srivaishnava sampradayam

தமிழ் மாமுனி திக்கு சரண்யம் என்றவர்களாலே க்வசித் க்வசித்து என்று, இவர் ஆவிர்ப்பாவம் 'கலியும் கெடும்' போலே சூசிதம் - ஆசார்ய ஹ்ருதயம் 91

க்ருதாதிஷூ நராராஜன் கலாவிச்சந்தி சம்பவம்
கலௌகலு பவிஷ்யந்தி நாராயண பாராயண:
க்வசித் க்வசித் மஹாராஜ திராவிடேஷு ச பூரிச
தாமிரபரணி நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினி
காவேரீச மஹாபாகா பிரதீசீச மஹாநதீ
யேபிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஸ்வர
தேஷாம் நாராயணே பக்தி: பூயஸீ நிருபத்ரவா  -பாகவதம் 11, 5:38-39

ஓ அரசனே! க்ருத யுகத்தில் உள்ளவர் கலியுகத்தில் பிறக்கும் பிறவியினை விரும்புகிறார்கள். கலியுகத்தில் நாராயணனே அடையத்தக்க பரம்பொருள் என்று எண்ணுகின்ற  பெரியோர்கள் அங்கும் இங்கும் பிறப்பார்கள். தமிழ் தேசத்தில் தாமிரபரணி, க்ருதமாலா, பாலாறு, காவேரி என்னும் இவ்வாறுகள் ஓடும் இடங்களில் பிறப்பார்கள். எந்த மனிதர்கள் அந்த நதிகளின் நீரை குடிக்கின்றனரோ அவர்களுக்கு நாராயணனிடத்தில் மிகுந்த பக்தி உண்டாகின்றது. - Shri BR Purushoththama Naidu - Tamil Translation of Swami Mamunigals vyakyanam for Acharya Hrudayam.

முதலில் தாமிரபரணி  என்று நம்மாழ்வாரின் அவதார  ஸ்தலத்தை சொல்வதால் நம்மாழ்வாரின் அவதாரம் முக்காலமும் உணர்ந்த ஸ்ரீ சுக மகரிஷியால் முன்கூட்டியே தெரிவிக்கப்படடது!

இதைப்போலவே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வாரும் "கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழிதரக் கண்டோம்" என்று எம்பெருமானின் அடியார்களின் வரும் காலத்தில் மலிந்து இருப்பதை தெரிவிக்கிறார்.

மாமுனிகள் இந்த சூத்ர வ்யாக்யானத்தில் "திருமங்கை ஆழ்வாரும், எம்பெருமானாரும்" அவதாரம் செய்யப்போவதை தெரிவிக்கிறார் என்றருளுகிறார்.

ஸ்வாமி இப்படி குறிப்பிட்டு வ்யாக்யானமிட்டது இதனால் இருக்கலாமோ?

1. திருவாய்மொழியாகிற  இருந்தமிழ்நூற்புலவன் திருமங்கை ஆழ்வாராகையாலும்

2. இதே பொலிக பொலிக பொலிக பதிக பலப் பாசுரத்தில்.

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள் செய்யும் - கலயாமி கலித்வம்சம் கவிம் லோக திவாகரம்

கலிவயல் தென்னன்  குருகூர் காரி மாறன்சடகோபன்   - கலி மிக்க செந்நெல்  கழனி குறையல் கலைப் பெருமான்

ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் - கலியன் ஒலிமாலை
என்று திருமங்கை ஆழ்வாரையும்

அந்த ஒலிமிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன் ஆகையாலும் குறையல் பிரானடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் என்பதாலும் எம்பெருமானரையும் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment